Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அமைச்சர் மணிகண்டன் துறையின் கீழ் வரும் அரசு கேபிள் டிவியின் தலைவராக இவரைவிட மூத்த அமைச்சரான உடுமலை இராதாகிருஷ்ணனை நியமித்ததால் அரசு கேபிள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு இரண்டு பக்க மத்தள அடிபோல் ஆகிவிட்டனர்.
மேலும் உடுமலை இராதாகிருஷ்ணன் நடத்தும் அக்ஷயா கேபிள் டிவிக்கு அரசு செட் ஆப் பாக்ஸ் வைக்காமல் தனியார் செட் ஆப் பாக்ஸ் பொறுத்தப்பட்டுள்ளதால் அரசு கேபிள் நிறுவனம் தனது நியாயமான வருமானத்தை இழந்துவிடுகிறது..
அக்ஷயா கேபிள் டிவி நிறுவனத்தில் அரசியல் அதிகார உச்சமட்ட உறவும் தொழில் கூட்டாளி என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சிக்கல் தான் அரசு கேபிள் நிறுவனத்தில் உருவாகியிருந்தது.
மாதம் பலகோடி புரளும் அரசு கேபிள் நிறுவனத்துக்கு அமைச்சர் அந்தஸ்தில் தலைவர் நியமிக்கப்பட்டதும் அதனால் அத்துறையின் அமைச்சர் மணிகண்டனுக்கே தெரியாமல் அரசு கேபிள் கட்டண நிர்ணயம் உட்பட அலுவல் ஆணைகள் வெளியானதும் உட்கட்சி முரணாயிருந்தது.
இப்போது மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு இது ஒரு நெருக்கடிதான்.